மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து ஹேமா, வேதா உட்பட 4 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கான நடப்பு ஆண்டு ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி 2020 அக்டோபர் முதல் 2021 செப்டம்பர் வரையிலான இந்தப்பட்டியல் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏ பிரிவினருக்கு ₹50லட்சமும், பி பிரிவினருக்கு ₹30லட்சமும், சி பிரிவினருக்கு ₹10லட்சமும் ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.ஏ பிரிவில் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத், ஸ்மிரிதி, பூனம் ஆகியோரும், பி பிரிவில் ஒருநாள், டெஸ்ட் அணிகளின் கேப்டன் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, தீப்தி, பூனம், ராஜேஸ்வரி, ஷபாலி, ராதா, ஷிகா, தன்யா, ஜெமீமா ஆகியோர் உள்ளனர். சி பிரிவில் மான்சி, அருந்ததி, பூஜா, ஹர்லீன், பிரியா, ரிச்சா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.இந்த 19 பேர்களில் ரிச்சா மட்டுமே புதிதாக ஒப்பந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். சி பிரிவில் இருந்த ராஜேஸ்வரி, ராதா, ஷபாலி ஆகியோர் பி பிரிவுக்கு முன்னேறியுள்ளார். அதேநேரத்தில் ஏற்கனவே ஒப்பந்த பட்டியலில் இருந்த ஹேமா தயாளன், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஏக்தா பிஷ்ட், அனுஜா பாடீல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்….
The post பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் ஹேமா, வேதா உட்பட 4 பேர் நீக்கம் appeared first on Dinakaran.